Saturday, February 19, 2011

முதல் தொலைப் பேச்சு!

மொட்டை மாடியில்..
தவளைக் கத்தலும்.. கும்மிருட்டும்... குளிர்க் காற்றும்..
கண்ணடித்த பல விண்மீன்களும்..
மிதந்து கொண்டே என்னை கடந்து சென்ற மேகங்களும்..
ஊடே கண்ணாமூச்சி ஆடிய அந்த வட்ட வெள்ளைக்காரியும்..
அவசரமாய் ஒதுங்க வந்து எனைப் பார்த்து பயந்த அறைத் தோழியையும்..
கற்பனையில் கொலுசொலியையும் மீறி...

பிறந்தது.. வளர்ந்தது..
பிடித்தது.. பிடிக்காதது..
அம்மாவிலிருந்து அத்தை வரை...
பக்கத்து வீட்டு கோலத்திலிருந்து..
பாசமான தோழி வரை...

பேசி பேசி நாவறண்டு நீர்க்குடிக்க ஓடினேன்...
சுள்ளென்று ஒரு முறை முறைத்தான் சூரியன்..
புரிந்தது ஒரு இரவில் சுய சரிதை சாத்தியமே என்று..

அணைக்க மனமில்லாமல் அணைத்தேன் என் கைபேசியை..
அரை மணி நேரம் இருந்தது அலுவலகத்திற்க்கு கிளம்ப..
மெத்தையில் படுத்து அசை போட்டேன்...
நமது முதல் தொலைபேசி உரையாடலை..

கொஞ்சம் கட்டை தான் ஆனாலும் ஒரு இனம்புரியா ஈர்ப்பு.. "அவன் குரலில்"

No comments:

Post a Comment