தூரத்தில் அவன் தெரிந்ததும் ஒரு படபடப்பு..
முதல் முறை அவனை மிக அருகில் பார்த்தேன்..
பார்வைகள் மோதியதில் குட்டி வெட்கச் சிரிப்பொன்று எட்டிப்பார்த்தது..
அவன் குரலை விட அழகோ அவன் "கண்கள்"??
எதிரில் கை காட்டிவிட்டு அருகில் வந்தமர்ந்தான்
வாரி அணைத்தது அவன் வாசனை..
கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினேன் என் கால்ப் பறவைகளை..
பாதி நேரம் கண்களைத் தவிர்த்த மௌனமும்..
மீதி நேரம் குழம்பில் உப்பில்லையென்றும்..
கிழங்கில் காரமில்லையென்றும் சப்பையாய்க் கழிந்தது..
ஒவ்வொரு கவளமும் கோலிகுண்டாய் இறங்கியது..
எதற்கோ வேகமாய் திரும்பினேன்...
விரல்கள் உரசிய வெப்பம் பிடித்தது..
அதை அவன் ஓரக் கண்ணால் பார்த்த விதமும் பிடித்தது..
புதிதாய் நகம் கடித்தேன்..
பத்து முறை கடிகாரம் பார்த்தேன் ..
பில் வந்தது.. பிரியும் நேரமும் வந்தது..
விடை பெறக் கொடுத்த கைகளை திருப்பி வாங்கத்தான் வேண்டுமா???
Sunday, February 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment