Friday, January 16, 2009

பிரிதலின் புரிதல்!!

அம்மாவின் அரவணைப்பு, அப்பாவின் ஆசிகள்,
உயிர்த் தோழர்களின் தோள்கள்;
இவை எதுவுமே எனக்கு கிடைத்திருக்காது,
உன்னை மறக்காதிருந்தால்!!

பிரிவின் தீரா ரணங்கள், மாறும் மனித முகங்கள்,
எனக்குள் ஒளிந்திருந்த கவிதை;
இவை எல்லாம் புரியாமலே போயிருக்கும்,
நீ பிரியாதிருந்தால்!!

வாழ்க உன் காதல் என வாழ்த்த வழியில்லை!!
வளரட்டும் உன் பிரிவின் தாக்கம்;
தொடரட்டும் இந்த துயரப் பாடம்!!

No comments:

Post a Comment